TNPSC TAMIL ILAKKIYAM பகுதி – (ஆ) – இலக்கியம்- ஐந்திணை ஐம்பது

TNPSC  Payilagam
By -
0

 


பகுதி – (ஆ) – இலக்கியம்- ஐந்திணை ஐம்பது

ஐந்திணை ஐம்பது

  • ஆசிரியர் = மாறன் பொறையனார்
  • காலம் = கி.பி. நான்காம் நூற்றாண்டு
  • பாடல்கள் = 50 (5 X 10 = 50)
  • திணை = ஐந்து அகத்திணை
  • திணை வைப்பு முறை = முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல்
  • பாவகை = வெண்பா
  • உள்ளடக்கிய பொருள்வகை = அகம்

பெயர்க்காரணம்

ஐந்து தினைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் ஐம்பது பாடல்கள் பாடப்பட்டதால் ஐந்திணை ஐமபது எனப் பெயர் பெற்றது.

“ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதார்”
என்று இந்நூலின் சிறப்பை உணர்ந்த பாயிரப்பாடல் கூறுகிறது.

பொதுவான குறிப்புகள்

  1. ஐந்திணை ஐம்பது: முல்லைத் தினையை முதலாவதாக கொண்ட பதினெண்கீழ்க்கணக்கு இது மட்டுமே ஆகும்.
  2. நச்சினார்கினியரரும், பேராசிரியரும் தங்கள் உரையில் இந்நூலின் பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளனர்
  3. தொல்காப்பியர் கூறாத பாலைத்திணை நான்காவதாக வைத்துப் பாடப்பட்டுள்ளது.
  4. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அகப்பொருள் கூறும் நூல்களுள் ஒன்று ஐந்திணை ஐம்பது.
  5. இந்நூல் சிறந்த செய்யுள் நடையையும் செறிந்த பொருளையும் கொண்டதாகும்.
  6. “ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதார்” என்று இந்நூலின் சிறப்பை உணர்ந்த பாயிரப்பாடல் கூறுகிறது.
  7. சொல்ல விழைந்த கருப்பொருளின் தன்மைகளுக்கேற்ப உருவாக்க வேண்டிய மனநிலைகளுக்குப் பொருத்தமான பின்னணிச் சூழ்நிலைகளை இத் திணைகளில் ஒன்றோ பலவோ வழங்கின.

முக்கிய அடிகள்

  • வெஞ்சுடர் அன்னானையான்கண்டேன் கண்டாளாம்
  • தண்சுடர் அன்னாளைத் தான்
  • சுனைவாய்ச் சிறுநீரை எய்தாது என்று எண்ணிப்
  • பிணைமான் இனிது உண்ண வேண்டிக் கலைமான்தன்
  • கள்ளத்தின் ஊச்சம் கரம் என்பர் காதலர்

உள்ளம் படர்ந்த நெறி

பாலைத் திணையைப் பின்னணியாகக் கொண்ட ஒரு பாடல் இது. வாழ்ந்த சூழலின் வசதிகளையும் பசுமையான நினைவுகளையும் விடுத்துக் காதலனுடன் வறண்ட பாலைநிலப் பகுதியூடாகச் செல்கிறாள் தலைவி.

பாலை நிலத்துக்கே இயல்பான கடுமை வாட்டும் எனினும் காதல் வயப்பட்ட உள்ளங்களுக்கே இயல்பான விட்டுக்கொடுப்புகள் அவர்களை மேலும் நெருக்கமாக்கும். இக்கருத்தை விளக்கும் இனிய பாடலொன்று இந்நூலில் வருகின்றது.

ஆணும் பெண்ணுமான இரு மான்கள் (கலைமான், பிணைமான்) பாலை நிலத்து நீர்ச் சுனை ஒன்றின் முன்னே நிற்கின்றன. வறண்டு போன அச்சுனையில் இருக்கும் நீர் இரண்டுக்கும் போதுமானதாக இல்லை.

தான் அருந்தாவிட்டால் பெண்மானும் அருந்தாது என்பது ஆண்மானுக்குத் தெரியும். எனவே பெண்மான் அருந்தட்டும் எனத் தான் அருந்துவது போல் பாசாங்கு செய்கிறதாம் ஆண்மான். இதுவே காதல் உள்ளங்களின் ஒழுக்கம் என்கிறார் புலவர்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)