உவமைத் தொடரின் பொருளறிதல் / UVAMAI THODAR PORUL ARITHAL TNPSC ILAKKANAM NOTES

TNPSC PAYILAGAM
By -
18 minute read
0

    UVAMAI THODAR PORUL ARITHAL TNPSC ILAKKANAM NOTES

தமிழ்‌ தகுதி மற்றும்‌ மதிப்பீட்டுத்‌ தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :

அலகு V: வாசித்தல் - புரிந்து கொள்ளும் திறன் 

உவமைத் தொடரின் பொருளறிதல் :



உவமைத் தொடர்கள்

நாம் பேச்சிலும் எழுத்திலும் கருத்துகளை எளிதாக விளக்குவதற்காகச் சில தொடர்களைப் பயன்படுத்துவோம். அவை உவமைத் தொடர்கள் எனப்படும். ஒவ்வொரு உவமைத் தொடருக்கும் தனிப் பொருள் உண்டு.

(எ.கா)

1. மடை திறந்த வெள்ளம் போல் - தடையின்றி மிகுதியாக.
திருவிழாவைக் காண மடைதிறந்த வெள்ளம் போல மக்கள் வந்தனர்.
2. உள்ளங்கை நெல்லிக்கனி போல - வெளிப்படைத் தன்மை
பாரதியின் பாடல்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல அனைவருக்கும் விளங்கும்.


பொருத்துக.

1. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல – அ) ஒற்றுமையின்மை
2. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல – ஆ) பயனற்ற செயல்
3. பசுமரத்து ஆணி போல – இ) தற்செயல் நிகழ்வு
4. விழலுக்கு இறைத்த நீர் போல – ஈ) எதிர்பாரா நிகழ்வு
5. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல – உ) எளிதில் மனதில் பதிதல்
விடை
1. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல – இ) தற்செயல் நிகழ்வு
2. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல – – ஈ) எதிர்பாரா நிகழ்வு
3. பசுமரத்து ஆணி போல – உ) எளிதில் மனதில் பதிதல்

4. விழலுக்கு இறைத்த நீர் போல - ஆ) பயனற்ற செயல்
5. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல – அ) ஒற்றுமையின்மை


 உவமைத் தொடர்களைப் பயன்படுத்தித் தொடர் அமைக்க.

1. குன்றின் மேலிட்ட விளக்கைப் போல
விடை : குன்றின் மேலிட்ட விளக்கைப்போல திருக்குறளின் புகழ் உலகெங்கும் பரவியுள்ளது.
 
2. வேலியே பயிரை மேய்ந்தது போல
விடை : வேலியே பயிரை மேய்ந்தது போல நாட்டைக் காப்பாற்ற வேண்டிய தலைவர்களே மக்களைத் துன்புறுத்துகின்றனர்.
 
3. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல
விடை : பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் நான் எதிர்பார்க்காமலேயே என் பிறந்த நாளுக்கு எனக்குப் புத்தாடை வாங்கித் தந்தார் என் அப்பா, என் மாமா மிதிவண்டி வாங்கித் தந்தார்.
 
4. உடலும் உயிரும் போல
விடை : உடலும் உயிரும் போல கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் நட்புடன் திகழ்ந்தனர்
 
5. கிணற்றுத் தவளை போல
விடை : கிணற்றுத் தவளை போல மூடர்கள் தம் பேச்சினாலேயே தம் அறியாமையை வெளிப்படுத்தி விடுவர்.


“காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்" - உவமை உணர்த்தும் கருத்து யாது?
  • நெற்பயிர் வளர்ந்து கதிரை ஈன்று நெல்மணிகளைக் காணும் முன்னரே மழைத்துளி இல்லாமல் காய்ந்துவிட்டது போல என்பது உவமை.
  • திருமுழுக்கு யோவான், கானகத்தில் தன்தாயார் எலிசபெத் அம்மாளுடன் வாழ்ந்த சூழலில் அவருடைய தாயார் இறந்து விட்டார். எனவே, நெற்பயிர் கதிரை ஈன்று நெல்மணிகள் முற்றுவதற்கு முன்னால் மழையின்றிப் பட்டுப் போனதைப் போல, திருமுழுக்கு யோவான் வளர்ந்து பெரிய மனிதராகி இச்சமுதாயத்திற்கு நற்பலன்களை வழங்குவதற்கு முன்னரே அவருடைய தாய் எலிசபெத் இறந்து போனது, நெற்பயிர் காய்ந்தது என்ற உவமைக்குக் கருத்தாக அமைகிறது.

உவமை தொடர்களும் அதன் பொருள்களும்:

1. அடியற்ற மரம் போல
பொருள் : அடியற்ற – வேரில்லாத
பயன்பாடு : பெரும்துன்பம்
கணவன் இறந்த செய்திக் கேட்ட கண்ணகி அடியற்ற மரம் போலச் சாய்ந்தாள்.

2. அனலில் இட்ட மெழுகு போல
பொருள் : அனலில் – நெருப்பில்
பயன்பாடு : துடிதுடித்தல்
பால் காய்ச்சும் போது தவறுதலாக கையில் ஊற்றிக் கொண்ட கவிதா, அனலில் இட்ட மெழுகு போல வலியால் துடித்தாள்.

3. இலைமறை காய் போல
பொருள் : இலைமறை – இலையின் மறைவில்
பயன்பாடு : மறைமுகமாக
திரைப்படத்தில் ஒரு சில மர்மங்களை இயக்குனர் இலைமறை காய் போல காட்டியிருந்தார்.

4. எலியும் பூனையும் போல
பொருள் : எலியும் பூனையும்
பயன்பாடு : எதிரிகளாக
ரகுவும் ரவியும் எலியும் பூனையும் போலச் சண்டையிட்டுக் கொண்டனர்.

5. ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல
பொருள் : ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் – ஒரு தாயின் வயிற்றிலிருந்து பிறந்த பிள்ளைகள்
பயன்பாடு : உடன் பிறந்தவர்களாக
ராமுவும் அவன் நண்பர்களும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல ஒற்றுமையுடன் பழகி வந்தார்கள்.

6. கண்ணினைக் காக்கும் இமை போல
பொருள் : கண்ணினைக் காக்கும் இமை – கண்களைக் காப்பாற்றும் இமைகள்
பயன்பாடு : அக்கறையாக
தாய் தன் குழந்தையை கண்ணினைக் காக்கும் இமை போலப் பார்த்துக் கொண்டாள்.

7. கரை காணாக் கப்பல் போல
பொருள் : கரை காணாக் கப்பல் – கரையை காணாமல் நடுக்கடலில் தவிக்கும் கப்பல்.
பயன்பாடு : தவிப்பு
கூட்டத்தில் தன் தாயை பிரிந்த குழந்தை, கரை காணாக் கப்பல் போல தவிதவித்தது.

8. கலங்கரை விளக்கம் போல
பொருள்: கப்பலுக்கு வழிக் காட்டும் வெளிச்சம்.
பயன்பாடு : வழிகாட்டுதல்
ஆசிரியர் தேவன் பாடம் கற்றுக் கொடுப்பது மட்டுமல்லாமல், வாழ்க்கைக்குத் தேவையானவற்றையும் கற்றுக் கொடுப்பதால், மாணவர்களுக்கு கலங்கரை விளக்கம் போல திகழ்ந்தார்.

9. கன்றினைக் கண்ட பசு போல
பொருள் : கன்றினைக் கண்ட பசு – கன்றுக்குட்டியை கண்ட தாய்ப்பசு
பயன்பாடு : சேயை கண்டு தாய் அடையும் மகிழ்ச்சி
கூட்டத்தில் காணாமல் போன குழந்தையை மீண்டும் பார்த்தவுடன், மீனாட்சி கன்றினைக் கண்ட பசு போல ஓடிச் சென்று தழுவினாள்.

10. காட்டுத்தீ போல
பொருள் : காட்டுத்தீ – காட்டில் பிடித்த தீ
பயன்பாடு : வேகமாகப் பரவுதல்
சில நேரங்களில், உண்மையை விட வதந்திகள் காட்டுத்தீ போலப் பரவுவதை நாம் உணர முடியும்.

11. கிணற்றுத் தவளை போல
பொருள் : கிணற்றுத் தவளை – கிணற்றுக்குள் வாழும் தவளை
பயன்பாடு : வெளி உலகம் தெரியாமல் இருப்பது.
மல்லிகா படித்திருந்தாலும், கிணற்றுத் தவளை போல அறியாமையுடன் இருந்தாள்.

12. தூண்டிலில் மாட்டிய மீன் போல
பொருள் : தூண்டிலில் மாட்டிய மீன் – தூண்டிலில் சிக்கிக் கொண்ட மீன்
பயன்பாடு : துடிதுடிப்பு
கொள்ளையர்களிடம் மாட்டிக் கொண்ட சிறுமி மீனா, தூண்டிலில் மாட்டிய மீன் போலத் துடித்தாள்.

13. அத்தி பூத்தாற்போல்
பொருள் : அத்தி பூத்தது – அத்திப்பூ பூத்தது
பயன்பாடு : அரிதாக
ராமு படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கிய பின், தொலைக்காட்சி பார்ப்பது அத்தி பூத்தாற் போல் ஆகிவிட்டது.

14. உடும்புப்பிடி போல்
பொருள் : உடும்புப்பிடி – உடும்பு(பல்லி வகை) சுவற்றை பிடித்திருப்பது.
பயன்பாடு : கெட்டியாக
மாறன் தன் கொள்கைகளை உடும்புப்பிடி போல பற்றிக் கொண்டிருந்தான்.

15. குடத்தில் இட்ட விளக்குப் போல
பொருள் : குடத்தில் இட்ட விளக்கு – குடத்துக்குள் ஏற்றிய விளக்கு
பயன்பாடு : திறமையை வெளிக்காட்டாமல்
வாய்ப்புக் கிடைக்காததால், அமரனின் ஓவியத் திறமை குடத்தில் இட்ட விளக்கு போல இருந்தது.

16. சிறகு ஒடிந்த பறவை போல
பொருள் : சிறகு ஒடிந்த பறவை – இறக்கைகளை இழந்த பறவை
பயன்பாடு : செயலற்றுப் போகுதல்
மனைவியை இழந்த குமரன் சிறகு ஒடிந்த பறவை போல ஆனான்.

17. ஆனை வாயில் அகப்பட்ட கரும்பு போல
பொருள் : ஆனை வாயில் அகப்பட்ட கரும்பு – யானையின் வாய்க்குள் போன கரும்பு
பயன்பாடு : நசுங்கிப் போதல்
கரும்பு ஆலையில் இயந்திரத்திற்குள் விடப்பட்ட கரும்பு ஆனை வாயில் அகப்பட்ட கரும்பு போல சக்கையானது.

18. கப்பல் கவிழ்ந்தாற் போல
பொருள் : கப்பல் கவிழ்ந்தால் – கப்பல் தண்ணீருக்குள் மூழ்கினால்
பயன்பாடு : சோகம்
பாரதி, மதிப்பெண்கள் குறைந்ததற்கு, ஏதோ கப்பல் கவிழ்ந்தாற் போல் சோகமாக இருந்தாள்.

19. கனியிருக்கக் காயை விரும்புவது போல
பொருள் : கனியிருக்கக் காயை விரும்புவது – இனிப்பான கனிகள் இருக்கும்போது கசப்பான காயை விரும்புவது
பயன்பாடு: நல்லது இருக்க, கெட்டதை நோக்கி செல்வது
பேசுவதற்கு பல இனிய சொற்கள் இருக்கும்போது தீய சொற்களை பயன்படுத்துவது கனியிருக்கக் காயை விரும்புவது போல என்று வள்ளுவர் கூறியுள்ளார்.

20. கீரியும் பாம்பும் போல
பொருள் : கீரியும் பாம்பும் -கீரிப்பிள்ளையும் பாம்பும்
பயன்பாடு : சண்டை
கவியும் ரதியும், கீரியும் பாம்பும் போல எப்போதும் சண்டையிட்டுக் கொண்டு இருப்பார்கள்.

21. குன்றின் மேலிட்ட விளக்குப் போல
பொருள் : குன்றின் மேலிட்ட விளக்கு – மலையின் மேல் ஏற்றி வைத்த விளக்கு
பயன்பாடு : அனைவரும் அறிதல்
கர்ணனின் கொடையுள்ளம் குன்றின் மேலிட்ட விளக்கு போல
அனைவரது உள்ளத்திலும் பிரகாசித்தது.

22. சுடச் சுடரும் பொன் போல
பொருள் : சுடச் சுடரும் பொன் – நெருப்பில் சுடச் சுட பொன் மிளிரும்.
பயன்பாடு : அனுபவத்தால் தேர்ந்தவர் ஆதல்
சுடச் சுடரும் பொன் போல, வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்கள் நம்மைச் செம்மைப் படுத்துகின்றன.

23. சூரியனைக் கண்ட பனி போல
பொருள் : சூரியனைக் கண்ட பனி – சூரியனைக் கண்ட பனித்துளி
பயன்பாடு : துன்பம் விலகுதல்
சூரியனைக் கண்ட பனி போல துன்பமெல்லாம் விலக வேண்டும் என்று மாதவி கடவுளை வணங்கினாள்.

24. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைப் போல
பொருள் : சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை – சொல்வதை அப்படியே திருப்பிச் சொல்லும் கிளி
பயன்பாடு : சொல்வதையே திருப்பித் திருப்பிச் சொல்லுதல்
சிறுபிள்ளைகள் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைப் போல அவர்கள் சொன்னதையே திருப்பிச் சொல்வார்கள்.

25. நீர்மேல் எழுத்துப் போல
பொருள் : தண்ணீர் மேல் எழுதும் எழுத்து
பயன்பாடு : நிரந்தரமற்ற வார்த்தைகளை குறிப்பிடுதல்
குடிகாரனின் வாக்கு நீர்மேல் எழுத்து போல, சொன்ன மாத்திரமே நீர்த்துப் போகும்.

26. பசுமரத்தாணி போல
பொருள் : பசுமரத்தாணி – பச்சை மரத்தில் ஆணியால் எழுதுவது
பயன்பாடு : நிரந்தரமாய் நினைவில் இருத்தல்
பசுமரத்தாணி போல சிறுவயதில் மனதில் பதிந்த நிகழ்வுகள் ஒருவரின் வாழ்வில் பெரிய மாற்றத்தை நிகழ்த்தும்.

27. பார்க்காததைப் பார்த்தது போல
பொருள் : பார்க்காததைப் பார்த்தது
பயன்பாடு : மலைப்பு
அலுவலகத்திலிருந்து முன்கூட்டியே வந்த தந்தையை ஏதோ பார்க்காததைப் பார்த்தது போலப் பார்த்து நின்றான் சரவணன்.

28 மழை பெய்து ஓய்ந்தது போல
பொருள் : மழை பெய்து ஓய்ந்தது – கனமழைக்குப் பின் மழை ஓய்ந்தது.
பயன்பாடு : பெரிய இரைச்சலுக்குப் பின் அமைதி நிலவுதல்.
திருமண வீட்டிற்கு வந்த அனைத்து விருந்தினரும் சென்ற பின், அந்த இடம் மழை பெய்து ஓய்ந்தது போலக் காணப்பட்டது.

29. அடுத்தது காட்டும் பளிங்கு போல
பொருள் : அடுத்தது காட்டும் பளிங்கு – தன்னை அடுத்த பொருளது நிறத்தைத் தானே கொண்டு காட்டும் பளிங்கு
பயன்பாடு : உள்ளத்தில் இருப்பதை முகம் காட்டிக் கொடுத்து விடுவது.
தன் அருகே இருக்கும் பொருளின் நிறத்தைக் காட்டும் பளிங்கினைப்போல் ஒருவனது மனதில் நிகழ்வதை அவன் முகம் காட்டும்.

30. தவளை தன் வாயால் கெட்டது போல
பொருள் : தவளை தன் வாயால் கெட்டது – தவளை வாயால் சத்தமிடுவதால் எதிரி அதன் இருப்பிடத்தை தெரிந்து கொள்ளுதல்.
பயன்பாடு : பேசியே ஆபத்தில் மாட்டிக் கொள்ளுதல்.
தவளை தன் வாயால் கெட்டது போல இரு திருடர்களும் திருடிய பொருளை எங்கு மறைத்து வைப்பது என்று விவாதித்ததை காவலர் கேட்டதால் அவர்களை கைது செய்தார்.

31. நீறு பூத்த நெருப்புப் போல
பொருள் : நீறு பூத்த நெருப்பு – சாம்பல் மறைத்து இருக்கும் நெருப்பு
பயன்பாடு : ஏற்கனவே இருந்த பிரச்சினை திடீரென்று வெடிப்பது
போரட்டத்தில் ஏற்கனவே, நீறு பூத்த நெருப்பு போல இருந்த கோரிக்கைகள், கனன்று, எரியத் துவங்கின.

32. வெறுங்கையில் முழம் போடுவது போல
பொருள் : வெறுங்கையில் முழம் போடுவது – கையில் பொருள் ஏதும் இல்லாமல் அளப்பது
பயன்பாடு : கையில் பொருள் இல்லாமல் செயலைத் திட்டமிடுவது.
மழை இன்றி இவ்வுலகின் நீர் ஆதாரங்களை செழிக்க வைப்பது வெறுங்கையில் முழம் போடுவது போல ஆகும்.

33. இரும்பை இழுக்கும் காந்தம் போல
பொருள் : இரும்பை இழுக்கும் காந்தம் – காந்தத்தால் கவரப்படும் இரும்பு
பயன்பாடு : ஈர்ப்பு
இரும்பை இழுக்கும் காந்தம் போல எறும்புகளை ஈர்த்தன இனிப்புப் பலகாரங்கள்.

34. எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தாற்போல
பொருள் : எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தல் – எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் தூண்டிவிடுவதாய் எண்ணெய் ஊற்றுதல்.
பயன்பாடு : பிரச்சினையைப் பெரிதாக்குதல்
பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்த போது, சிலர் வன்முறையில் இறங்கியதால், எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தாற்போல போராட்டம் தீவிரமடைந்தது.

35. தாயைக் கண்ட சேயைப் போல
பொருள் : சேய் – குழந்தை
பயன்பாடு : மகிழ்ச்சி
சேகர் தன் குடும்பத்தைக் கண்டவுடன் தாயைக் கண்ட சேயைப் போல மகிழ்ந்தான்.

36. நகமும் சதையும் போல
பொருள் : நகமும் சதையும் – நகமும் நகத்தை ஒட்டி இருக்கும் சதையும்.
பயன்பாடு : நெருக்கம்
கலாவும் சீதாவும், நகமும் சதையும் போல இணை பிரியாத தோழிகளாக இருந்தார்கள்.

37. நுனிப்புல் மேய்ந்தாற்போல
பொருள் : நுனிப்புல் – புல்லின் நுனி
பயன்பாடு : மேலோட்டமாக
ரவி, நுனிப்புல் மேய்ந்தாற்போல படித்ததால் அவனால் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விரிவாகப் பதிலளிக்க இயலவில்லை.

38. பல் பிடுங்கின பாம்பு போல
பொருள் : பல் பிடுங்கின பாம்பு – பல் பிடுங்கப்பட்ட பாம்பு
பயன்பாடு : செயலற்ற தன்மை
பெரிய கொள்ளைக்காரனான சேது, கைது செய்யப்பட்டவுடன் பல் பிடுங்கின பாம்பு போல ஆனான்.

39. பழமரம் நாடிய பறவை போல
பொருள் : பழமரம் நாடிய பறவை – பழங்கள் நிறைய இருக்கும் மரத்தை தேடி செல்லும் பறவை
பயன்பாடு : பொருள் இருக்கும் இடத்தைத் தேடி செல்வது.
குணாளன் செல்வந்தராக ஆனபோது அவருடைய பழைய நண்பர்கள் அனைவரும் பழமரம் நாடிய பறவை போல வந்து சேர்ந்தனர்.

40. பாம்புக்குப் பால் வார்த்தாற்போல
பொருள் : பாம்புக்குப் பால் வார்ப்பது – பாம்புக்குப் பாலைக் கொடுப்பது.
பயன்பாடு : நல்லது செய்பவருக்கே தீங்கு விளைவிப்பது.
இளகிய மனம் கொண்ட கந்தன், திருட வந்த திருடனுக்கு வேலை போட்டுக் கொடுத்து, பாம்புக்குப் பால் வார்த்தாற்போல் பணமும் கொடுத்தார். ஆனால் திருடனோ கையில் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.

41. புலியைக் கண்ட மான் போல
பொருள் : புலியைக் கண்ட மான்
பயன்பாடு : மிரட்சி, பயந்து ஓடுதல்
1. அந்நியர்களைக் கண்ட குழந்தை புலியைக் கண்ட மான் போல மிரண்டது.
2. காவலரைக் கண்ட திருடன் புலியைக் கண்ட மான் போல பயந்து ஓடினான்.

42. பூவோடு சேர்ந்த நாறும் மணப்பது போல
பொருள் : பூவோடு சேர்ந்த நாறும் மணப்பது – நாறில் கட்டப்படும் பூவினால் நாறும் சேர்ந்து மணம் பெறுவது.
பயன்பாடு : நல்லவர்களுடன் சேர்ந்து நன்மை அடைவது.
நல்லவர்களுடன் பழகினால் பூவோடு சேர்ந்த நாறும் மணப்பது போல நாமும் நன்மை அடையலாம்.

43. முகத்தில் அடித்தாற்போல
பொருள் : முகத்தில் அடித்தல் – அவமானப் படுத்துதல்
பயன்பாடு : அவமானம்
நெடுநாள் பகையில் இருந்த ரவி மனந்திருந்தி தன் நண்பனைப் பார்க்க வந்த போது, நண்பனின் மனைவி முகத்தில் அடித்தாற்போல பேசி அனுப்பினாள்.

44. வெயிலில் இட்ட புழு போல
பொருள் : வெயிலில் இட்ட புழு – சூடு தாங்காமல் துடிக்கும் புழு
பயன்பாடு : துடிப்பது
கையில் காய்ச்சின பாலை ஊற்றிக்கொண்ட மாலதி வெயிலில் இட்ட புழு போல துடித்தாள்.

45. கல்லில் நார் உரித்தாற்போல
பொருள் : கல்லில் நார் உரிப்பது -கல்லில் இருந்து நார் எடுப்பது
பயன்பாடு : பொய்யாகக் கதை சொல்வது
மாலன் தான் செய்த தவறை மறைக்க கல்லில் நார் உரித்தாற்போல பல கற்பனைக் கதைகளை அவிழ்த்து விட்டான்.

46. தூங்குகிற புலியைத் தட்டி எழுப்பினாற்போல
பொருள் : தூங்குகிற புலியைத் தட்டி எழுப்புவது
பயன்பாடு : அமைதியாக இருப்பவரை தூண்டிவிடுவது
தூங்குகிற புலியைத் தட்டி எழுப்பினாற்போல, அடிமைப் பட்டு கிடந்த மக்களின் உள்ளத்தில் புரட்சியை விதைத்தன பாரதிதாசனின் கவிதைகள்.

47. பசுத்தோல் போர்த்திய புலி போல
பொருள் : பசுத்தோல் போர்த்திய புலி – பசுவின் தோலைக் கொண்டு மூடியிருக்கும் புலி
பயன்பாடு : சாதுவாக நடிப்பது
பரம சாதுவான பாலன் ஒருநாள் சண்டையில் மிக மூர்க்கமாக நடந்து கொண்டபோதுதான், அவன் பசுத்தோல் போர்த்திய புலி போல என்பது தெரியவந்தது.

48. மீகாமன் இல்லா மரக்கலம் போல
பொருள் : மீகாமன் இல்லா மரக்கலம் – கப்பலை வழிநடத்துபவர் இல்லாத கப்பல்
பயன்பாடு : வழிகாட்டுதல் இல்லாமல் தவித்தல்
கணவன் இறந்த பின் கமலாவின் குடும்பம் மீகாமன் இல்லா மரக்கலம் போல தவித்தது.

49. அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாற்போல
பொருள் : அவசரக் கோலம் அள்ளித் தெளிப்பது – நிதானமாக அழகாக போடவேண்டிய கோலத்தை அவசரமாக அள்ளித் தெளிப்பது.
பயன்பாடு : நிதானமாகச் செய்யவேண்டிய செயலை அவசரமாக செய்வது.
முன்பெல்லாம் மூன்று நாட்கள் என்று இருந்தது போய், ஒரு நாள் திருமணத்தில் காலை, மாலை என இருந்ததும் போய் இப்போது காலை மட்டும் அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாற்போல என ஆகி இருக்கிறது இக்காலத் திருமண விழா.

50. அடிவயிற்றில் நெருப்பைக் கட்டினாற்போல
பொருள் : அடிவயிற்றில் நெருப்பைக் கட்டுவது
பயன்பாடு : பயம்
இரவில் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் சென்ற ரமாவிற்கு அடிவயிற்றில் நெருப்பைக் கட்டினாற்போல இருந்தது.

51. இடி ஓசை கேட்ட நாகம் போல
பொருள் : நாகம் – பாம்பு
பயன்பாடு : சீற்றம்
அவர்களின் நியாயமற்ற கோரிக்கைகளைக் கேட்ட ராமன், இடி ஓசை கேட்ட நாகம் போல சீறினான்.

52. ஏறவிட்டு ஏணியைப் பிடுங்கினாற்போல
பொருள் : ஏறவிட்டு ஏணியைப் பிடுங்குவது – இறங்குவதற்கு ஏணி கொடுக்காமல் இருப்பது.
பயன்பாடு : பாதியில் தவிக்க விடுவது
தன் வீட்டுப் பூனையை பக்கத்து ஊருக்கு அழைத்துச் சென்று, அங்கேயே விட்டு வந்த சுந்தரத்தின் செயல் ஏறவிட்டு ஏணியைப் பிடுங்கினாற்போல இருந்தது.

53. காதும் காதும் வைத்தாற்போல
பொருள் : காதும் காதும் வைப்பது
பயன்பாடு : ஒருவருக்கும் தெரியாமல்
திருடிய பொருட்களை கொள்ளையர்கள் காதும் காதும் வைத்தாற்போல மறைத்து வைத்தார்கள்.

54. பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல
பொருள் : பழம் நழுவிப் பாலில் விழுவது
பயன்பாடு : செய்ய வேண்டிய செயல் சுலபமாக நிறைவேறுவது
காவல் அதிகாரி வீட்டிலேயே திருட வந்த திருடனைப் பார்த்த அதிகாரிக்கு பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல இருந்தது.

55. போர் முனையிலே ஆயுதம் தேடுதல் போல
பொருள் : போர் முனையிலே ஆயுதம் தேடுதல்
பயன்பாடு : குறிப்பிட்ட பொருட்கள் நிறைய இருக்கும் இடத்திலேயே அப்பொருளைத் தேடுதல்
தலைவலியால் அவதியுற்ற மருத்துவர், அதற்கான மருந்தினை மருத்துவமனையில் தேடியது போர் முனையிலே ஆயுதம் தேடுதல் போல இருந்தது.

56. முழுப்பூசணியைச் சோற்றில் மறைத்தாற்போல
பொருள் : முழுப்பூசணியைச் சோற்றில் மறைப்பது – முழுமையான பூசணிக்காயை சோற்றில் மறைத்து வைப்பது.
பயன்பாடு : மிகப் பெரிய செயலை மறைப்பது
முழுப்பூசணியைச் சோற்றில் மறைத்தாற்போல பூரணி, தான் வேலை இழந்த செய்தியை பெற்றோரிடம் மறைத்தாள்.

57. வளர்த்த கடா மார்பிலே பாய்ந்தாற்போல
பொருள் : கடா – விலங்கினத்தின் ஆண்பால் பொதுப்பெயர்
பயன்பாடு : நன்றி மறத்தல்
வளர்த்த கடா மார்பிலே பாய்ந்தாற்போல செல்வம், தனது பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தான்.

58. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினாற்போல
பொருள் : வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது
பயன்பாடு : நாசூக்காக
நண்பன் வீட்டிற்கு சென்ற குமார், தனக்கு பசிக்கிறது என்பதை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினாற்போல உணர்த்தினான்.

59. விழலுக்கிறைத்த நீர் போல
பொருள் : விழல் – தேவையற்ற புல்
பயன்பாடு : தேவையற்ற
நவீன் படிப்பதற்காக அவனது தந்தை செய்த செலவுகள் எல்லாம் விழலுக்கிறைத்த நீர் போல ஆனது.

60. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாற்போல
பொருள் : வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது
பயன்பாடு : ஒருவர் துன்பத்தில் இருக்கும் போது அவருக்கு இன்னும் துன்பம் கொடுப்பது.
கணவனை இழந்து தவித்த வானதிக்கு கடன்காரர்களின் தொல்லை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாற்போல இருந்தது.

61. அன்ன நடை கற்கப் போய்த் தன் நடையும் இழந்தாற்போல
பொருள் : அன்ன நடை கற்கப் போய்த் தன் நடையும் இழப்பது
பயன்பாடு : புதிதாய் ஒன்று செய்யத் துவங்கி இருப்பதையும் இழப்பது.
அன்ன நடை கற்கப் போய்த் தன் நடையும் இழந்தாற்போல, கணவன் மனைவி சண்டையில் சமாதானம் செய்யச் சென்ற நண்பர் சுந்தரம், அவர்களின் நட்பை இழந்து திரும்பினார்.

62. ஆகாயத்தில் கட்டிய கோட்டை போல
பொருள் : ஆகாயம் – வானம்; கோட்டை – பெரிய கட்டிடம்
பயன்பாடு: முடியாத ஒன்றைக் கற்பனைச் செய்தல்
தேர்வு நேரத்தில் படிப்பில் கவனம் செலுத்தாமல், மல்லிகா தான் முதல் மதிப்பெண் வாங்குவதாக ஆகாயத்தில் கட்டிய கோட்டை போல கற்பனை செய்து கொண்டிருந்தாள்.

63. கண்ணில்லார் பெற்றிழந்தாற்போல
பொருள் : கண்ணில்லார் பெற்றிழத்தல் – கண் இல்லாதவர் பெற்று இழப்பது.
பயன்பாடு : தற்காலிக இன்பம்
வறுமையில் வாடிய இரத்தினம் குடும்பத்தினருக்கு, திடீரென்று கிடைத்த அதிர்ஷ்டக் குலுக்கின் பணம் திருடு போனது கண்ணில்லார் பெற்றிழந்தாற்போல ஆனது.

64. நவில்தொறும் நூல்நயம் போல
பொருள் : நவில்தொறும் நூல்நயம் – நூலின் பொருள் கற்கும் போது கற்றார்க்கு இன்பம் சேர்த்தல்
பயன்பாடு : பழக பழக இன்பம் தருவது.
நவில்தொறும் நூல்நயம் போல, பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.



உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் (TNPSC OLD QUESTIONS)
 

1. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல (10-12-2023 TNPSC)
(A)
தற்செயல் நிகழ்வு
(B)
எதிர்பாரா நிகழ்வு
(C)
வெளிப்படைத் தன்மை
(D)
ஒற்றுமையின்மை

2. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல (10-12-2023 TNPSC)
(A)
தற்செயல் நிகழ்வு
(B)
எதிர்பாரா நிகழ்வு
(C)
பயனற்ற செயல்
(D)
ஒற்றுமையின்மை

3. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க. (10-12-2023 TNPSC)
(A)
ஒற்றுமையின்மை
(B)
தடையின்றி மிகுதியாக
(C)
வெளிப்படைத்தன்மை
(D)
ஒற்றுமை

4. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு
மழை முகம் காணாப் பயிர் போல (09-12-2023 TNPSC)
(A)
மழைக் குறைவு
(B)
வெளிப்படைத் தன்மை
(C)
எதிர்பாரா நிகழ்வு
(D)
வாடியிருத்தல்

5. உவமையின் பொருளறிந்து சரியான தொடரை தெரிவு செய்க.
விழலுக்கு இறைத்த நீர் போல (09-12-2023 TNPSC)
(A)
எதிர்பாராத நிகழ்வு
(B)
தற்செயல் நிகழ்வு
(C)
ஒற்றுமையின்மை
(D)
பயனற்ற நிகழ்வு

6. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுது
வேலியே பயிரை மேய்ந்தது போல (05-12-2023 TNPSC)
(A)
எதிர்பாரா நிகழ்வு
(B)
அறியாமை
(C)
கடமை தவறுதல்
(D)
பற்றாக்குறை

7. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக : பசு மரத்து ஆணி போலை (05-12-2023 TNPSC)
(A)
பயனற்ற செயல்
(B)
தற்செயல் நிகழ்வு
(C)
எளிதில் மனத்தில் பதிதல்
(D)
எதிர்பாரா நிகழ்வு

8. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் -
"
கிணற்றுத் தவளை போல" உவமை கூறும் பொருள் தெளிக. (05-12-2023 TNPSC)
(A)
சுயநலம்
(B)
ஞானம்
(C)
அறிவு
(D)
அறியாமை 

9. "விழலுக்கு இறைத்த நீர் போல" என்ற சொற்றொடரில் உவமை விளக்கும் பொருள்? (05-10-2023 TNPSC)
(A)
ஒற்றுமையின்மை
(B)
தற்செயல் நிகழ்வு
(C)
எதிர்பாரா நிகழ்வு
(D)
பயனற்ற செயல்

10. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக: நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல (05-10-2023 TNPSC)
(A)
ஒற்றுமையின்மை
(B)
பயனற்ற செயல்
(C)
தற்செயல் நிகழ்வு
(D)
எதிர்பாரா நிகழ்வு

11. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக: 'வேலியே பயிரை மேய்ந்தது போல' - உவமை கூறும் பொருள் தெளிக. (05-10-2023 TNPSC)
(A)
கடமை தவறுதல்
(B)
கடமை
(C)
பொறுப்புணர்வு
(D)
வெறுப்பு

12. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல். "நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல" (09-09-2023 TNPSC)
(A)
பயனற்ற செயல்
(B)
ஒற்றுமையின்மை
(C)
தற்செயல் நிகழ்வு
(D)
வெளிப்படைத் தன்மை

13. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல - இந்த உவமையின் பொருளைத் தேர்க. (09-09-2023 TNPSC)
(A)
தற்செயல் நிகழ்வு
(B)
தடையின்றி மிகுதியாக
(C)
அவசரகுடுக்கை
(D)
எதிர்பாரா நிகழ்வு

14. உவமைகளால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் விழலுக்கு இறைத்த நீர் போல (18-08-2023 TNPSC)
(A)
ஒற்றுமையின்மை
(B)
பயனற்ற செயல்
(C)
தற்செயல் நிகழ்வு
(D)
எதிர்பாரா நிகழ்வு

15. உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்ந்தெழுதுதல்:
திருவிழாவைக்காண மடை திறந்த வெள்ளம் போல மக்கள் வந்தனர். (18-08-2023 TNPSC)
(A)
தடையின்றி மிகுதியாக
(B)
வெளிப்படைத்தன்மை
(C)
பயனற்ற செயல்
(D)
எதிர்பாரா நிகழ்வு

16. 'தாமரை இலை நீர் போல'-உவமை கூறும் பொருள் யாதென கண்டறிக. (27-05-2023 TNPSC)
(A)
சேர்ந்திருத்தல்
(B)
பட்டும் படாமல் இருத்தல்
(C)
ஒட்டியிருத்தல்
(D)
பிரிந்திருத்தல்

17. பேரறிவாளன் திருபோல எனும் உவமை கூறும் பொருள் எதுவென கண்டறிக. (27-05-2023 TNPSC)
(A)
பலருக்கு பயன்படும்
(B)
சிலருக்கு பயன்படும்
(C)
தனக்கு பயன்படும்
(D)
யாருக்கும் பயன்படாது

18. சரியான இணையைக் கண்டறிக : (27-05-2023 TNPSC)
(A)
இலவு காத்த கிளிபோல - ஏமாற்றம்
(B)
இடியோசை கேட்ட நாகம்போல - விரைவு
(C)
குன்றின் மேலிட்ட விளக்கு போல - வேதனை
(D)
அடுத்தது காட்டும் பளிங்கு போல - சேர்ந்திருத்தல்

19. 'உள்ளங்கை நெல்லிக்கனி போல' என்ற சொற்றொடரில் உவமை விளக்கும் பொருள்? (23-07-2023 TNPSC)
(A)
வெளிப்படைத் தன்மை
(B)
எளிதில் மனதில் பதிதல்
(C)
தற்செயல் நிகழ்வு
(D)
பயனற்ற செயல்

20. 'காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல' என்ற உவமைக்குப் பொருத்தமான பொருள் யாது? (23-07-2023 TNPSC)
(A)
ஒற்றுமையின்மை
(B)
தற்செயல் நிகழ்வு
(C)
பயனற்ற செயல்
(D)
எதிர்பாரா நிகழ்வு

21. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல - உவமையின் பொருளைத் தேர்க.(23-07-2023 TNPSC)
(A)
தடையின்றி மிகுதியாக
(B)
எண்ணி செயல்படாமை
(C)
ஒற்றுமையின்மை
(D)
தற்செய நிகழ்வு

22. "மழைமுகம் காணாப் பயிர்போல" -உவமைத் தொடர் விளக்கும் பொருளைத் தேர்ந்தெழுது. (01-07-2023 TNPSC)
(A)
வருந்துதல்
(B)
அழுதல்
(c)
அச்சப்படுதல்
(D)
சிரித்தல்

23. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. "பசு மரத்து ஆணி போல" (01-07-2023 TNPSC)
(A)
தெளிவாகத் தெரியும்
(B)
எளிதில் மரத்தில் பதியும்
(C)
எளிதில் மனதில் பதியாது
(D)
எளிதில் மனதில் பதியும் 

 24. 'தாமரை இலை நீர் போல'-உவமை கூறும் பொருள் யாதென கண்டறிக. (27-05-2023 TNPSC)
(A)
சேர்ந்திருத்தல்
(B)
பட்டும் படாமல் இருத்தல்
(C)
ஒட்டியிருத்தல்
(D)
பிரிந்திருத்தல்

25. பேரறிவாளன் திருபோல எனும் உவமை கூறும் பொருள் எதுவென கண்டறிக. (27-05-2023 TNPSC)
(A)
பலருக்கு பயன்படும்
(B)
சிலருக்கு பயன்படும்
(C)
தனக்கு பயன்படும்
(D)
யாருக்கும் பயன்படாது

26. சரியான இணையைக் கண்டறிக : (27-05-2023 TNPSC)
(A)
இலவு காத்த கிளிபோல - ஏமாற்றம்
(B)
இடியோசை கேட்ட நாகம்போல - விரைவு
(C)
குன்றின் மேலிட்ட விளக்கு போல - வேதனை
(D)
அடுத்தது காட்டும் பளிங்கு போல - சேர்ந்திருத்தல்

27. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.'பசு மரத்து ஆணி போல'- உவமை கூறும் பொருள் தெளிக. (20-05-2023 TNPSC)
(A)
எதிர்பாரா நிகழ்வு
(B)
எளிதில் மனத்தில் பதிதல்
(C)
பயனற்ற செயல்
(D)
ஒற்றுமையின்மை

28. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 'மடை திறந்த வெள்ளம் போல்' - உவமை கூறும் பொருள் தெளிக. (20-05-2023 TNPSC)
(A)
பலவாக
(B)
குறைவாக
(C)
தடையின்றி மிகுதியாக
(D)
மிகுதியாக

29. அவசரக் குடுக்கை என்ற உவமையின் பொருளை எழுதுக. (13-05-2023 TNPSC)
(A)
விரைந்து வெளியேறுதல்
(B)
இயலாத செயல்
(C)
எண்ணி செயல்படாமை
(D)
நீண்டகாலமாக இருப்பது

30. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்: "காக்கை உட்காரப் பணம்பழம் விழுந்ததுபோல" (13-05-2023 TNPSC)
(A)
வெளிப்படைத் தன்மை
(B)
பயனற்ற செயல்
(C)
ஒற்றுமையின்மை
(D)
தற்செயல் நிகழ்வு

31. 'பசுமரத்து ஆணி போல' என்ற உவமைக்குப் பொருத்தமான பொருள் யாது? (13-05-2023 TNPSC)
(A)
பயனற்ற செயல்
(B)
தற்செயல் நிகழ்வு
(C)
எதிர்பாரா நிகழ்வு
(D)
எளிதில் மனதில் பதிதல்

32, உவமையின் பொருளறிந்து சரியான விடையைத் தேர்க. கிணற்றுத் தவளை போல (07-05-2023 TNPSC)
(A)
ஒற்றுமையின்மை
(B)
தற்செயல் நிகழ்வு
(C)
அறியாமை நிகழ்வு
(D)
எதிர்பாராத நிகழ்வு

33. 'விழலுக்கு இறைத்த நீர்போல' என்ற உவமைக்கு ஏற்றப் பொருள் தருக. (07-05-2023 TNPSC)
(A)
ஒற்றுமையின்மை
(B)
வெளிப்படைத்தன்மை
(C)
பயனற்ற செயல்
(D)
எதிர்பாரா செயல்

34. பசுமரத்து ஆணி போல - உவமையின் பொருளைத் தேர்க. (07-05-2023 TNPSC)
(A)
தடையின்றி மிகுதியாக
(B)
அவசர குடுக்கை
(C)
தற்செயல் நிகழ்வு
(D)
எளிதில் மனத்தில் பதிதல்

35. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல (01-04-2023 TNPSC)
(A)
எதிர்பாரா நிகழ்வு
(B)
தற்செயல் நிகழ்வு
(C)
ஒற்றுமையின்மை
(D)
பயனற்ற செயல்

36. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 'விழலுக்கு இறைத்த நீர் போல'-உவமை கூறும் பொருள் தெளிக. (01-04-2023 TNPSC)
(A)
பயனற்ற செயல்
(B)
எதிர்பாராத செயல்
(C)
தற்செயல் நிகழ்வு
(D)
வெளிப்படைத் தன்மை

37. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் பாரதியின் பாடல்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல அனைவருக்கும் விளங்கும். (01-04-2023 TNPSC)
(A)
வெளிப்படைத் தன்மை
(B)
தடையின்றி மிகுதியாக
(C)
ஒற்றுமையின்மை
(D)
பயனற்ற செயல்

38. 'கிணற்றுத் தவளை போல'-உவமை கூறும் பொருள் தெளிக (15-03-2023 TNPSC)
(A)
தெளிவு
(B)
அறிவுடைமை
(C)
உலக அறிவின்மை
(D)
தெளிவின்மை

39. 'விழலுக்கு இறைத்த நீர் போல' - உவமை கூறும் பொருத்தமான பொருளைத் தோக. (15-03-2023 TNPSC)
I.
பயனின்மை
II.
இல்லாதிருத்தல்
III.
பயனடைதல்
IV.
மறைந்துபோதல்
(A) I
(B) IV
(C) II
(D) III

40. துஞ்சுபுலி இடறிய சிதடன் போல .... 
உவமை கூறும் பொருள் எதுவென கண்டறிக. (14-03-2023 TNPSC)
(A)
துணிதல்
(B)
அறிதல்
(C)
அறியாமை
(D)
ஆணவம்

41. உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல். பசுமரத்து ஆணி போல (14-03-2023 TNPSC)
(A)
எதிர்பாராத நிகழ்வு
(B)
தற்செயல் நிகழ்வு
(C)
பயனற்ற செயல்
(D)
எளிதில் மனத்தில் பதிதல்

42. "உடலும் உயிரும் போல" - உவமை கூறும் பொருள் தெளிக. (10-03-2023 TNPSC)
(A)
வேற்றுமை
(B)
நட்பு
(C)
ஒற்றுமை
(D)
பகைமை

43. "அத்தி பூத்தது போல"-உவமை கூறும் பொருள் தெளிக. (10-03-2023 TNPSC)
(A)
மிக எளிதாக
(B)
மிக அரிதாக
(C)
மிக உயரமாக
(D)
மிக குள்ளமாக

44. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளை தேர்ந்தெழுதுதல். 'எடுப்பார் கைப்பிள்ளை' (10-03-2023 TNPSC) 
(A)
கைக்குழந்தையின் செயல்பாடுகள்
(B)
யார் எதை சொன்னாலும் கேட்பது
(C)
இளமைப்பருவத்து நினைவுகள்
(D)
குழந்தைப்பருவத்தின் உணவு பழக்கவழக்கங்கள்

45. உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல். நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல (13-02-2023 TNPSC)
(A)
ஒற்றுமையின்மை
(B)
பயனற்ற செயல்
(C)
தற்செயல் நிகழ்வு
(D)
எதிர்பாரா நிகழ்வு

46. உவமையால் விளக்கப்பெறும் கருத்தை தேர்ந்தெழுதுதல். கிணறு வெட்டப்பூதம் கிளம்பியது போல (13-02-2023 TNPSC)
(A)
பயனற்ற செயல்
(B)
எதிர்பாரா நிகழ்வு
(C)
தற்செயல் நிகழ்வு
(D)
ஒற்றுமையின்மை

47. "உள்ளங்கை நெல்லிக்கனி போல” - உவமை கூறும் பொருள் தெளிக. (08-02-2023 TNPSC)
(A)
தெளிவு
(B)
கடினம்
(C)
ஐயம்
(D)
கவனம்

48. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல் உடலும் உயிரும் போல (08-02-2023 TNPSC)
(A)
வேற்றுமை
(B)
ஒற்றுமை
(C)
நம்பிக்கை
(D)
உண்மை

49. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் 'தாமரை இலை நீர் போல' (08-02-2023 TNPSC)
(A)
தாமரை இலை மேல் நீர் ஒட்டாது
(B)
பாதுகாப்பின்றி அலைதல்
(C)
செல்வத்துடன் வாழ்தல்
(D)
ஒட்டாமலும், ஒதுங்காமலும் இருத்தல்

50. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல். காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல (07-02-2023 TNPSC)
(A)
எதிர்பாரா நிகழ்வு
(B)
தற்செயல் நிகழ்வு
(C)
ஒற்றுமையின்மை
(D)
பயனற்ற செயல்

51. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 'விழலுக்கு இறைத்த நீர் போல'-உவமை கூறும் பொருள் தெளிக. (07-02-2023 TNPSC)
(A)
பயனற்ற செயல்
(B)
எதிர்பாராத செயல்
(C)
தற்செயல் நிகழ்வு
(D)
வெளிப்படைத் தன்மை

52. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் பாரதியின் பாடல்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல அனைவருக்கும் விளங்கும். (07-02-2023 TNPSC)
(A)
வெளிப்படைத் தன்மை
(B)
தடையின்றி மிகுதியாக
(C)
ஒற்றுமையின்மை
(D)
பயனற்ற செயல்

53. எம்.ஜி.ஆர். திரைத்துறையில் "கொடிக் கட்டிப் பறந்தார்" - உவமையின் பொருளை எழுதுக. (29-01-2023 TNPSC)
(A)
நீண்ட காலமாக இருப்பது
(B)
புகழ்பெற்று விளங்குதல்
(C)
எண்ணி செயல்படாமை
(D)
விரைந்து வெளியேறுதல்

54. இரட்டை கிளவி போல் .... உவமை கூறும் பொருள் யாதென கண்டறிக. (29-01-2023 TNPSC)
(A)
வளமை
(B)
வறுமை
(C)
வேற்றுமை
(D)
ஒற்றுமை

55. பொருந்தா இணையைக் கண்டறிக. (29-01-2023 TNPSC)
(A)
உள்ளங்கை நெல்லிக்கனிபோல - தெளிவு
(B)
நகமும் சதையும் போல - நட்பு
(C)
நீர் மேல்  எழுத்து போல - நிலையின்மை
(D)
மழைமுகம் காணாப் பயிர்போல - உவகை

56. பொருத்துக. (29-01-2023 TNPSC)
(a)
ஊமை கண்ட கனவு போல - 1. நட்பு
(b)
உடுக்கை இழந்தவன் கை போல - 2. கொடை
(c)
வரையா மரபின் மாரி போல - 3. அடக்கம்
(d)
ஒருமையுள் ஆமை போல - 4. தவிப்பு
(A) 4 2 3 1
(B) 1 2 3 4
(C) 4 1 2 3
(D) 4 3 2 1

57. “மழைமுகம் காணாப் பயிர் போலஉவமைக்குப் பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (2023 Group 3A)
(A)
செழிப்புஇன்பம்
(B)
வறட்சி வாட்டம் - துன்பம்
(C)
மகிழ்ச்சிமிகுந்த இன்பம்
(D)
மழைவெயில்

58. “பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலஇவ்வுவமைக்குப் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (2023 Group 3A)
(A)
எதிர்பார்த்த ஒன்று எதிர்பாராமல் நடக்காதிருத்தல்
(B)
நினைத்த ஒன்று, பிடித்த செயல் ஒன்று எதிர்பாராமல் நடப்பது
(C)
பயனுள்ள நன்மை நடக்காதிருத்தல்
(D)
பயனற்ற செயல், பயனற்ற நன்மை

 

 PART 2 :உவமைத் தொடரின் பொருளறிதல் 

 

Q1: உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல். எலியும் பூனையும் போலஉவமை கூறும் பொருள் கூறுக
(
) ஒற்றுமை
(
) வேற்றுமை
(
) ஏமாற்றம்
(
) நட்பு

Q2: “இலவு காத்த கிளி போலஎன்ற சொற்றொடரில் உவமை விளக்கும் பொருள்
(
) ஏமாற்றம்
(
) தோல்வி
(
) காவல்
(
) நன்மை

Q3: உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்: “பசுமரத்தாணி போல” 
(
) பயனற்ற செயல்
(
) எளிதில் மனத்தில் பதிதல்
(
) எதிர்பாரா நிகழ்வு
(
) தற்செயல் நிகழ்வு

Q4: “மழை காணாப் பயிர்போல” – உவமை கூறும் பொருள் தெளிக
(
) சோகம்
(
) அழுகை
(
) உவகை
(
) சிரிப்பு

Q5: ”குன்றேறி யானைப்போர் கண்டற்றால்” – உவமை கூறும் பொருள் தெளிக
(
) பயம்
(
) பாதுகாப்பு
(
) மலை
(
) சண்டை

Q6: உவமைகளால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்: “விழலுக்கு இறைத்த நீர் போல” – உவமை கூறும் பொருளைக் கூறுக 
(
) எதிர்பாரா நிகழ்வு
(
) பயனற்ற செயல்
(
) தற்செயல் நிகழ்வு
(
) வெளிப்படைத் தன்மை

Q7: விழலுக்கு இறைத்த நீர் போல இவ்வுவமை விளக்கும் பொருள் யாது ?
A)
பயனுள்ள செயல்
B)
பயனற்ற செயல்
C)
எதிர்பாரா செயல்
D)
எதிர்பார்த்த செயல்

Q8: உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளை தேர்ந்தெழுதுதல்மடை திறந்த வெள்ளம் போல 
A)
வெளிப்படைத் தன்மையாக
B)
தெள்ளத் தெளிவாக
C)
தடையின்றி மிகுதியாய்
D)
எளிதில் மனதில் பதிதல்

Q9: உவமைகளால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்: “விழலுக்கு இறைத்த நீர் போல” – உவமை கூறும் பொருளைக் கூறுக
(
) எதிர்பாரா நிகழ்வு
(
) பயனற்ற செயல்
(
) தற்செயல் நிகழ்வு
(
) வெளிப்படைத் தன்மை

Q10: உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுகஉள்ளங்கை நெல்லிக்கனி போல 
A)
வெளிப்படைத் தன்மை
B)
வெளிப்படையற்ற தன்மை
C)
மறைத்து வைத்தல்
D)
தன்னலமின்மை

Q11: உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்க: கண்ணை இமை காப்பது போல 
(
) ஒற்றுமை
(
) வேற்றுமை
(
) பாதுகாப்பு
(
) ஏமாற்றம்

Q12: உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல். “கீரியும் பாம்பும் போல” – உவமை கூறும் பொருள் தெளிக
(
) பகைமை
(
) நட்பு
(
) ஒற்றுமை
(
) வேற்றுமை

Q13: உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. “நகமும் சதையும் போல” – உவமை கூறும் பொருளை எழுதுக
(
) வேற்றுமை
(
) நட்பு
(
) ஏமாற்றம்
(
) ஒற்றுமை

Q14: உவமைக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக: நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற்போல 
(
) ஒற்றுமை
(
) நட்பு
(
) ஒற்றுமையின்மை
(
) பகைமை

Q15: உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக: “மழைமுகம் காணாப்பயிர் போல” 
(
) ஏக்கம்
(
) இரக்கம்
(
) நட்பு
(
) பகைமை

Q16: வஞ்சகன் முதலைக் கண்ணீர் வடித்தான்இந்த உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருள் யாது
(
) மெய்யழுகை-உண்மையான அழுகை
(
) எண்ணித் துணியாதார்-நல்லவன் வடிக்கும் கண்ணீர்
(
) பொய்யழுகை, பொய்யான நட்பு, தீமை தரக்கூடிய கண்ணீர்
(
) பொய்யில்லாத அழுகை

Q17: கீழ்க்கண்ட உவமைக்கு பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க: “உடலும் உயிரும் போல
(
) ஒற்றுமையின்மை
(
) மகிழ்ச்சி
(
) வெளிப்படைத்தன்மை
(
) ஒற்றுமை

Q18: உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக
தாமரை இலை நீர்போல
(
) ஏமாற்றம்
(
) பற்றுதல் இன்றி
(
) ஏற்றம்
(
) இரக்கம்

Q19: உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் 
கல்லில் நார் உரித்தல்
(
) நீண்டகாலமாக இருப்பது
(
) ஆராய்ந்து பாராமல்
(
) இயலாத செயல்
(
) விரைந்து வெளியேறுதல்

Q20: தவறான உவமை இணையைத் தேர்ந்தெடுக்க
(
) பசுமரத்தாணிபோலஎளிதில் மனத்தில் பதிதல்
(
) மடைதிறந்த வெள்ளம்போலதடையின்று
(
) கீரியும் பாம்பும் போலஒற்றுமை
(
) விழலுக்கு இறைத்த நீர்போலபயனற்றசெயல்

Q21: “உள்ளங்கை நெல்லிக்கனி போல” – உவமை கூறும் பொருள் தெளிக
(
) தெளிவாக
(
) சிறப்பாக
(
) நன்றாக
(
) வெளிப்படைத் தன்மையாக

Q22: எலியும் பூனையும் போல' உவமை கூறும் பொருளை எழுதுக
(A)
பகைமை
(B)
ஒற்றுமை
(C)
நட்பு
(D)
வேற்றுமை

Q23: உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல். மழைமுகம் காணாப் பயிர் போல 
(A)
மழை பொழியாத நிலை.
(B)
மழையின் முகம் பயிரின் வருத்தம்
(C)
நீண்ட நாள் காணாமல் ஏங்குவது
(D)
வருத்தமும், மகிழ்ச்சியும் கலந்த நிலை

Q24: உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் - விழலுக்கு இறைத்த நீர் போல 
(A)
பயனுள்ள செயல்
(B)
பயனற்ற செயல்
(C)
மிகுதியான செயல்
(D)
தகுதியான செயல்

Q25: "நகமும் சதையும் போல” - உவமை கூறும் பொருள் தெளிக
(A)
வேற்றுமை
(B)
ஒற்றுமை
(C)
பகைமை
(D)
நட்பு

Q26: தீயொழுக்கம் கானல்நீர் போன்றது பொருத்தமான பொருள் யாது
(A)
மகிழ்ச்சியைத் தருவது
(B)
இருப்பது போல் தோன்றும் ஆனால் இராதது
(C)
துன்பத்தைக் கொடுப்பது
(D)
இன்பம், துன்பம் உடையது

Q27: உவமைத் தொடரின் பொருத்தமான பொருளைத் தேர்ந்து எழுதுக. 'அறிஞர் அண்ணாவின் மேடைப்பேச்சு மடை திறந்த வெள்ளம் போல அமைந்துள்ளது
(A)
தெளிவற்ற பேச்சு
(B)
குழப்பமான பேச்சு
(C)
தெளிவான, சீரான பேச்சு
(D)
கலக்கம் நிறைந்த பேச்சு

 


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)