தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :
அலகு V: வாசித்தல் - புரிந்து கொள்ளும் திறன்
உவமைத் தொடரின் பொருளறிதல் :
உவமைத் தொடர்களைப் பயன்படுத்தித் தொடர் அமைக்க.
விடை : குன்றின் மேலிட்ட விளக்கைப்போல திருக்குறளின் புகழ் உலகெங்கும் பரவியுள்ளது.
2. வேலியே பயிரை மேய்ந்தது போல
விடை : வேலியே பயிரை மேய்ந்தது போல நாட்டைக் காப்பாற்ற வேண்டிய தலைவர்களே மக்களைத் துன்புறுத்துகின்றனர்.
3. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல
விடை : பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் நான் எதிர்பார்க்காமலேயே என் பிறந்த நாளுக்கு எனக்குப் புத்தாடை வாங்கித் தந்தார் என் அப்பா, என் மாமா மிதிவண்டி வாங்கித் தந்தார்.
4. உடலும் உயிரும் போல
விடை : உடலும் உயிரும் போல கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் நட்புடன் திகழ்ந்தனர்
5. கிணற்றுத் தவளை போல
விடை : கிணற்றுத் தவளை போல மூடர்கள் தம் பேச்சினாலேயே தம் அறியாமையை வெளிப்படுத்தி விடுவர்.
- நெற்பயிர் வளர்ந்து கதிரை ஈன்று நெல்மணிகளைக் காணும் முன்னரே மழைத்துளி இல்லாமல் காய்ந்துவிட்டது போல என்பது உவமை.
- திருமுழுக்கு யோவான், கானகத்தில் தன்தாயார் எலிசபெத் அம்மாளுடன் வாழ்ந்த சூழலில் அவருடைய தாயார் இறந்து விட்டார். எனவே, நெற்பயிர் கதிரை ஈன்று நெல்மணிகள் முற்றுவதற்கு முன்னால் மழையின்றிப் பட்டுப் போனதைப் போல, திருமுழுக்கு யோவான் வளர்ந்து பெரிய மனிதராகி இச்சமுதாயத்திற்கு நற்பலன்களை வழங்குவதற்கு முன்னரே அவருடைய தாய் எலிசபெத் இறந்து போனது, நெற்பயிர் காய்ந்தது என்ற உவமைக்குக் கருத்தாக அமைகிறது.
1. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல (10-12-2023 TNPSC)
(A) தற்செயல் நிகழ்வு
(B) எதிர்பாரா நிகழ்வு
(C) வெளிப்படைத் தன்மை
(D) ஒற்றுமையின்மை
2. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல (10-12-2023 TNPSC)
(A) தற்செயல் நிகழ்வு
(B) எதிர்பாரா நிகழ்வு
(C) பயனற்ற செயல்
(D) ஒற்றுமையின்மை
3. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க. (10-12-2023 TNPSC)
(A) ஒற்றுமையின்மை
(B) தடையின்றி மிகுதியாக
(C) வெளிப்படைத்தன்மை
(D) ஒற்றுமை
4. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு
மழை முகம் காணாப் பயிர் போல (09-12-2023 TNPSC)
(A) மழைக் குறைவு
(B) வெளிப்படைத் தன்மை
(C) எதிர்பாரா நிகழ்வு
(D) வாடியிருத்தல்
5. உவமையின் பொருளறிந்து சரியான தொடரை தெரிவு செய்க.
விழலுக்கு இறைத்த நீர் போல (09-12-2023 TNPSC)
(A) எதிர்பாராத நிகழ்வு
(B) தற்செயல் நிகழ்வு
(C) ஒற்றுமையின்மை
(D) பயனற்ற நிகழ்வு
6. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுது
வேலியே பயிரை மேய்ந்தது போல (05-12-2023 TNPSC)
(A) எதிர்பாரா நிகழ்வு
(B) அறியாமை
(C) கடமை தவறுதல்
(D) பற்றாக்குறை
7. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக : பசு மரத்து ஆணி போலை (05-12-2023 TNPSC)
(A) பயனற்ற செயல்
(B) தற்செயல் நிகழ்வு
(C) எளிதில் மனத்தில் பதிதல்
(D) எதிர்பாரா நிகழ்வு
8. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் -
"கிணற்றுத் தவளை போல" உவமை கூறும் பொருள் தெளிக. (05-12-2023 TNPSC)
(A) சுயநலம்
(B) ஞானம்
(C) அறிவு
(D) அறியாமை
9. "விழலுக்கு இறைத்த நீர் போல" என்ற சொற்றொடரில் உவமை விளக்கும் பொருள்? (05-10-2023 TNPSC)
(A) ஒற்றுமையின்மை
(B) தற்செயல் நிகழ்வு
(C) எதிர்பாரா நிகழ்வு
(D) பயனற்ற செயல்
10. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக: நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல (05-10-2023 TNPSC)
(A) ஒற்றுமையின்மை
(B) பயனற்ற செயல்
(C) தற்செயல் நிகழ்வு
(D) எதிர்பாரா நிகழ்வு
11. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக: 'வேலியே பயிரை மேய்ந்தது போல' - உவமை கூறும் பொருள் தெளிக. (05-10-2023 TNPSC)
(A) கடமை தவறுதல்
(B) கடமை
(C) பொறுப்புணர்வு
(D) வெறுப்பு
12. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல். "நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல" (09-09-2023 TNPSC)
(A) பயனற்ற செயல்
(B) ஒற்றுமையின்மை
(C) தற்செயல் நிகழ்வு
(D) வெளிப்படைத் தன்மை
13. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல - இந்த உவமையின் பொருளைத் தேர்க. (09-09-2023 TNPSC)
(A) தற்செயல் நிகழ்வு
(B) தடையின்றி மிகுதியாக
(C) அவசரகுடுக்கை
(D) எதிர்பாரா நிகழ்வு
14. உவமைகளால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் விழலுக்கு இறைத்த நீர் போல (18-08-2023 TNPSC)
(A) ஒற்றுமையின்மை
(B) பயனற்ற செயல்
(C) தற்செயல் நிகழ்வு
(D) எதிர்பாரா நிகழ்வு
15. உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்ந்தெழுதுதல்:
திருவிழாவைக்காண மடை திறந்த வெள்ளம் போல மக்கள் வந்தனர். (18-08-2023 TNPSC)
(A) தடையின்றி மிகுதியாக
(B) வெளிப்படைத்தன்மை
(C) பயனற்ற செயல்
(D) எதிர்பாரா நிகழ்வு
16. 'தாமரை இலை நீர் போல'-உவமை கூறும் பொருள் யாதென கண்டறிக. (27-05-2023 TNPSC)
(A) சேர்ந்திருத்தல்
(B) பட்டும் படாமல் இருத்தல்
(C) ஒட்டியிருத்தல்
(D) பிரிந்திருத்தல்
17. பேரறிவாளன் திருபோல எனும் உவமை கூறும் பொருள் எதுவென கண்டறிக. (27-05-2023 TNPSC)
(A) பலருக்கு பயன்படும்
(B) சிலருக்கு பயன்படும்
(C) தனக்கு பயன்படும்
(D) யாருக்கும் பயன்படாது
18. சரியான இணையைக் கண்டறிக : (27-05-2023 TNPSC)
(A) இலவு காத்த கிளிபோல - ஏமாற்றம்
(B) இடியோசை கேட்ட நாகம்போல - விரைவு
(C) குன்றின் மேலிட்ட விளக்கு போல - வேதனை
(D) அடுத்தது காட்டும் பளிங்கு போல - சேர்ந்திருத்தல்
19. 'உள்ளங்கை நெல்லிக்கனி போல' என்ற சொற்றொடரில் உவமை விளக்கும் பொருள்? (23-07-2023 TNPSC)
(A) வெளிப்படைத் தன்மை
(B) எளிதில் மனதில் பதிதல்
(C) தற்செயல் நிகழ்வு
(D) பயனற்ற செயல்
20. 'காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல' என்ற உவமைக்குப் பொருத்தமான பொருள் யாது? (23-07-2023 TNPSC)
(A) ஒற்றுமையின்மை
(B) தற்செயல் நிகழ்வு
(C) பயனற்ற செயல்
(D) எதிர்பாரா நிகழ்வு
21. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல - உவமையின் பொருளைத் தேர்க.(23-07-2023 TNPSC)
(A) தடையின்றி மிகுதியாக
(B) எண்ணி செயல்படாமை
(C) ஒற்றுமையின்மை
(D) தற்செய நிகழ்வு
22. "மழைமுகம் காணாப் பயிர்போல" -உவமைத் தொடர் விளக்கும் பொருளைத் தேர்ந்தெழுது. (01-07-2023
TNPSC)
(A) வருந்துதல்
(B) அழுதல்
(c) அச்சப்படுதல்
(D) சிரித்தல்
23. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. "பசு மரத்து ஆணி போல" (01-07-2023 TNPSC)
(A) தெளிவாகத் தெரியும்
(B) எளிதில் மரத்தில் பதியும்
(C) எளிதில் மனதில் பதியாது
(D) எளிதில் மனதில் பதியும்
24. 'தாமரை இலை நீர் போல'-உவமை கூறும் பொருள் யாதென கண்டறிக. (27-05-2023 TNPSC)
(A) சேர்ந்திருத்தல்
(B) பட்டும் படாமல் இருத்தல்
(C) ஒட்டியிருத்தல்
(D) பிரிந்திருத்தல்
25. பேரறிவாளன் திருபோல எனும் உவமை கூறும் பொருள் எதுவென கண்டறிக. (27-05-2023 TNPSC)
(A) பலருக்கு பயன்படும்
(B) சிலருக்கு பயன்படும்
(C) தனக்கு பயன்படும்
(D) யாருக்கும் பயன்படாது
26. சரியான இணையைக் கண்டறிக : (27-05-2023 TNPSC)
(A) இலவு காத்த கிளிபோல - ஏமாற்றம்
(B) இடியோசை கேட்ட நாகம்போல - விரைவு
(C) குன்றின் மேலிட்ட விளக்கு போல - வேதனை
(D) அடுத்தது காட்டும் பளிங்கு போல - சேர்ந்திருத்தல்
27. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.'பசு மரத்து ஆணி போல'- உவமை கூறும் பொருள் தெளிக. (20-05-2023 TNPSC)
(A) எதிர்பாரா நிகழ்வு
(B) எளிதில் மனத்தில் பதிதல்
(C) பயனற்ற செயல்
(D) ஒற்றுமையின்மை
28. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 'மடை திறந்த வெள்ளம் போல்' - உவமை கூறும் பொருள் தெளிக. (20-05-2023 TNPSC)
(A) பலவாக
(B) குறைவாக
(C) தடையின்றி மிகுதியாக
(D) மிகுதியாக
29. அவசரக் குடுக்கை என்ற உவமையின் பொருளை எழுதுக. (13-05-2023 TNPSC)
(A) விரைந்து வெளியேறுதல்
(B) இயலாத செயல்
(C) எண்ணி செயல்படாமை
(D) நீண்டகாலமாக இருப்பது
30. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்: "காக்கை உட்காரப் பணம்பழம் விழுந்ததுபோல" (13-05-2023 TNPSC)
(A) வெளிப்படைத் தன்மை
(B) பயனற்ற செயல்
(C) ஒற்றுமையின்மை
(D) தற்செயல் நிகழ்வு
31. 'பசுமரத்து ஆணி போல' என்ற உவமைக்குப் பொருத்தமான பொருள் யாது? (13-05-2023 TNPSC)
(A) பயனற்ற செயல்
(B) தற்செயல் நிகழ்வு
(C) எதிர்பாரா நிகழ்வு
(D) எளிதில் மனதில் பதிதல்
32, உவமையின் பொருளறிந்து சரியான விடையைத் தேர்க. கிணற்றுத் தவளை போல (07-05-2023 TNPSC)
(A) ஒற்றுமையின்மை
(B) தற்செயல் நிகழ்வு
(C) அறியாமை நிகழ்வு
(D) எதிர்பாராத நிகழ்வு
33. 'விழலுக்கு இறைத்த நீர்போல' என்ற உவமைக்கு ஏற்றப் பொருள் தருக. (07-05-2023 TNPSC)
(A) ஒற்றுமையின்மை
(B) வெளிப்படைத்தன்மை
(C) பயனற்ற செயல்
(D) எதிர்பாரா செயல்
34. பசுமரத்து ஆணி போல - உவமையின் பொருளைத் தேர்க. (07-05-2023 TNPSC)
(A) தடையின்றி மிகுதியாக
(B) அவசர குடுக்கை
(C) தற்செயல் நிகழ்வு
(D) எளிதில் மனத்தில் பதிதல்
35. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல (01-04-2023 TNPSC)
(A) எதிர்பாரா நிகழ்வு
(B) தற்செயல் நிகழ்வு
(C) ஒற்றுமையின்மை
(D) பயனற்ற செயல்
36. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 'விழலுக்கு இறைத்த நீர் போல'-உவமை கூறும் பொருள் தெளிக. (01-04-2023 TNPSC)
(A) பயனற்ற செயல்
(B) எதிர்பாராத செயல்
(C) தற்செயல் நிகழ்வு
(D) வெளிப்படைத் தன்மை
37. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் பாரதியின் பாடல்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல அனைவருக்கும் விளங்கும். (01-04-2023 TNPSC)
(A) வெளிப்படைத் தன்மை
(B) தடையின்றி மிகுதியாக
(C) ஒற்றுமையின்மை
(D) பயனற்ற செயல்
38. 'கிணற்றுத் தவளை போல'-உவமை கூறும் பொருள் தெளிக (15-03-2023 TNPSC)
(A) தெளிவு
(B) அறிவுடைமை
(C) உலக அறிவின்மை
(D) தெளிவின்மை
39. 'விழலுக்கு இறைத்த நீர் போல' - உவமை கூறும் பொருத்தமான பொருளைத் தோக. (15-03-2023 TNPSC)
I. பயனின்மை
II. இல்லாதிருத்தல்
III. பயனடைதல்
IV. மறைந்துபோதல்
(A) I
(B) IV
(C) II
(D) III
40. துஞ்சுபுலி இடறிய சிதடன் போல ....
உவமை கூறும் பொருள் எதுவென கண்டறிக. (14-03-2023 TNPSC)
(A) துணிதல்
(B) அறிதல்
(C) அறியாமை
(D) ஆணவம்
41. உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல். பசுமரத்து ஆணி போல (14-03-2023 TNPSC)
(A) எதிர்பாராத நிகழ்வு
(B) தற்செயல் நிகழ்வு
(C) பயனற்ற செயல்
(D) எளிதில் மனத்தில் பதிதல்
42. "உடலும் உயிரும் போல" - உவமை கூறும் பொருள் தெளிக. (10-03-2023 TNPSC)
(A) வேற்றுமை
(B) நட்பு
(C) ஒற்றுமை
(D) பகைமை
43. "அத்தி பூத்தது போல"-உவமை கூறும் பொருள் தெளிக. (10-03-2023 TNPSC)
(A) மிக எளிதாக
(B) மிக அரிதாக
(C) மிக உயரமாக
(D) மிக குள்ளமாக
44. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளை தேர்ந்தெழுதுதல். 'எடுப்பார் கைப்பிள்ளை' (10-03-2023 TNPSC)
(A) கைக்குழந்தையின் செயல்பாடுகள்
(B) யார் எதை சொன்னாலும் கேட்பது
(C) இளமைப்பருவத்து நினைவுகள்
(D) குழந்தைப்பருவத்தின் உணவு பழக்கவழக்கங்கள்
45. உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல். நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல (13-02-2023 TNPSC)
(A) ஒற்றுமையின்மை
(B) பயனற்ற செயல்
(C) தற்செயல் நிகழ்வு
(D) எதிர்பாரா நிகழ்வு
46. உவமையால் விளக்கப்பெறும் கருத்தை தேர்ந்தெழுதுதல். கிணறு வெட்டப்பூதம் கிளம்பியது போல (13-02-2023 TNPSC)
(A) பயனற்ற செயல்
(B) எதிர்பாரா நிகழ்வு
(C) தற்செயல் நிகழ்வு
(D) ஒற்றுமையின்மை
47. "உள்ளங்கை நெல்லிக்கனி போல” - உவமை கூறும் பொருள் தெளிக. (08-02-2023 TNPSC)
(A) தெளிவு
(B) கடினம்
(C) ஐயம்
(D) கவனம்
48. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல் உடலும் உயிரும் போல (08-02-2023 TNPSC)
(A) வேற்றுமை
(B) ஒற்றுமை
(C) நம்பிக்கை
(D) உண்மை
49. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் 'தாமரை இலை நீர் போல' (08-02-2023 TNPSC)
(A) தாமரை இலை மேல் நீர் ஒட்டாது
(B) பாதுகாப்பின்றி அலைதல்
(C) செல்வத்துடன் வாழ்தல்
(D) ஒட்டாமலும், ஒதுங்காமலும் இருத்தல்
50. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல். காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல (07-02-2023 TNPSC)
(A) எதிர்பாரா நிகழ்வு
(B) தற்செயல் நிகழ்வு
(C) ஒற்றுமையின்மை
(D) பயனற்ற செயல்
51. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 'விழலுக்கு இறைத்த நீர் போல'-உவமை கூறும் பொருள் தெளிக. (07-02-2023 TNPSC)
(A) பயனற்ற செயல்
(B) எதிர்பாராத செயல்
(C) தற்செயல் நிகழ்வு
(D) வெளிப்படைத் தன்மை
52. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் பாரதியின் பாடல்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல அனைவருக்கும் விளங்கும். (07-02-2023 TNPSC)
(A) வெளிப்படைத் தன்மை
(B) தடையின்றி மிகுதியாக
(C) ஒற்றுமையின்மை
(D) பயனற்ற செயல்
53. எம்.ஜி.ஆர். திரைத்துறையில் "கொடிக் கட்டிப் பறந்தார்" - உவமையின் பொருளை எழுதுக. (29-01-2023 TNPSC)
(A) நீண்ட காலமாக இருப்பது
(B) புகழ்பெற்று விளங்குதல்
(C) எண்ணி செயல்படாமை
(D) விரைந்து வெளியேறுதல்
54. இரட்டை கிளவி போல் .... உவமை கூறும் பொருள் யாதென கண்டறிக. (29-01-2023 TNPSC)
(A) வளமை
(B) வறுமை
(C) வேற்றுமை
(D) ஒற்றுமை
55. பொருந்தா இணையைக் கண்டறிக. (29-01-2023 TNPSC)
(A) உள்ளங்கை நெல்லிக்கனிபோல - தெளிவு
(B) நகமும் சதையும் போல - நட்பு
(C) நீர் மேல் எழுத்து போல - நிலையின்மை
(D) மழைமுகம் காணாப் பயிர்போல - உவகை
56. பொருத்துக. (29-01-2023 TNPSC)
(a) ஊமை கண்ட கனவு போல - 1. நட்பு
(b) உடுக்கை இழந்தவன் கை போல - 2. கொடை
(c) வரையா மரபின் மாரி போல - 3. அடக்கம்
(d) ஒருமையுள் ஆமை போல - 4. தவிப்பு
(A) 4 2 3 1
(B) 1 2 3 4
(C) 4 1 2 3
(D) 4 3 2 1
57. “மழைமுகம் காணாப் பயிர் போல” உவமைக்குப் பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (2023 Group 3A)
(A) செழிப்பு – இன்பம்
(B) வறட்சி வாட்டம் - துன்பம்
(C) மகிழ்ச்சி – மிகுந்த இன்பம்
(D) மழை – வெயில்
58. “பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல” இவ்வுவமைக்குப் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (2023 Group 3A)
(A) எதிர்பார்த்த ஒன்று எதிர்பாராமல் நடக்காதிருத்தல்
(B) நினைத்த ஒன்று, பிடித்த செயல் ஒன்று எதிர்பாராமல் நடப்பது
(C) பயனுள்ள நன்மை நடக்காதிருத்தல்
(D) பயனற்ற செயல், பயனற்ற நன்மை
Q1: உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல். எலியும் பூனையும் போல – உவமை கூறும் பொருள் கூறுக:
(அ) ஒற்றுமை
(ஆ) வேற்றுமை
(இ) ஏமாற்றம்
(ஈ) நட்பு
Q2: “இலவு காத்த கிளி போல” என்ற சொற்றொடரில் உவமை விளக்கும் பொருள்?
(அ) ஏமாற்றம்
(ஆ) தோல்வி
(இ) காவல்
(ஈ) நன்மை
Q3: உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்: “பசுமரத்தாணி போல”
(அ) பயனற்ற செயல்
(ஆ) எளிதில் மனத்தில் பதிதல்
(இ) எதிர்பாரா நிகழ்வு
(ஈ) தற்செயல் நிகழ்வு
Q4: “மழை காணாப் பயிர்போல” – உவமை கூறும் பொருள் தெளிக:
(அ) சோகம்
(ஆ) அழுகை
(இ) உவகை
(ஈ) சிரிப்பு
Q5: ”குன்றேறி யானைப்போர் கண்டற்றால்” – உவமை கூறும் பொருள் தெளிக:
(அ) பயம்
(ஆ) பாதுகாப்பு
(இ) மலை
(ஈ) சண்டை
Q6: உவமைகளால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்: “விழலுக்கு இறைத்த நீர் போல” – உவமை கூறும் பொருளைக் கூறுக
(அ) எதிர்பாரா நிகழ்வு
(ஆ) பயனற்ற செயல்
(இ) தற்செயல் நிகழ்வு
(ஈ) வெளிப்படைத் தன்மை
Q7: விழலுக்கு இறைத்த நீர் போல இவ்வுவமை விளக்கும் பொருள் யாது ?
A) பயனுள்ள செயல்
B) பயனற்ற செயல்
C) எதிர்பாரா செயல்
D) எதிர்பார்த்த செயல்
Q8: உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளை தேர்ந்தெழுதுதல் – மடை திறந்த வெள்ளம் போல
A) வெளிப்படைத் தன்மையாக
B) தெள்ளத் தெளிவாக
C) தடையின்றி மிகுதியாய்
D) எளிதில் மனதில் பதிதல்
Q9: உவமைகளால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்: “விழலுக்கு இறைத்த நீர் போல” – உவமை கூறும் பொருளைக் கூறுக
(அ) எதிர்பாரா நிகழ்வு
(ஆ) பயனற்ற செயல்
(இ) தற்செயல் நிகழ்வு
(ஈ) வெளிப்படைத் தன்மை
Q10: உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக – உள்ளங்கை நெல்லிக்கனி போல
A) வெளிப்படைத் தன்மை
B) வெளிப்படையற்ற தன்மை
C) மறைத்து வைத்தல்
D) தன்னலமின்மை
Q11: உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்க: கண்ணை இமை காப்பது போல
(அ) ஒற்றுமை
(ஆ) வேற்றுமை
(இ) பாதுகாப்பு
(ஈ) ஏமாற்றம்
Q12: உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல். “கீரியும் பாம்பும் போல” – உவமை கூறும் பொருள் தெளிக.
(அ) பகைமை
(ஆ) நட்பு
(ஈ) ஒற்றுமை
(ஈ) வேற்றுமை
Q13: உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. “நகமும் சதையும் போல” – உவமை கூறும் பொருளை எழுதுக.
(அ) வேற்றுமை
(ஆ) நட்பு
(இ) ஏமாற்றம்
(ஈ) ஒற்றுமை
Q14: உவமைக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக: நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற்போல
(அ) ஒற்றுமை
(ஆ) நட்பு
(இ) ஒற்றுமையின்மை
(ஈ) பகைமை
Q15: உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக: “மழைமுகம் காணாப்பயிர் போல”
(அ) ஏக்கம்
(ஆ) இரக்கம்
(இ) நட்பு
(ஈ) பகைமை
Q16: வஞ்சகன் முதலைக் கண்ணீர் வடித்தான் – இந்த உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருள் யாது?
(அ) மெய்யழுகை-உண்மையான அழுகை
(ஆ) எண்ணித் துணியாதார்-நல்லவன் வடிக்கும் கண்ணீர்
(இ) பொய்யழுகை, பொய்யான நட்பு, தீமை தரக்கூடிய கண்ணீர்
(ஈ) பொய்யில்லாத அழுகை
Q17: கீழ்க்கண்ட உவமைக்கு பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க: “உடலும் உயிரும் போல”
(அ) ஒற்றுமையின்மை
(ஆ) மகிழ்ச்சி
(இ) வெளிப்படைத்தன்மை
(ஈ) ஒற்றுமை
Q18: உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
“தாமரை இலை நீர்போல”
(அ) ஏமாற்றம்
(ஆ) பற்றுதல் இன்றி
(இ) ஏற்றம்
(ஈ) இரக்கம்
Q19: உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
கல்லில் நார் உரித்தல்
(அ) நீண்டகாலமாக இருப்பது
(ஆ) ஆராய்ந்து பாராமல்
(இ) இயலாத செயல்
(ஈ) விரைந்து வெளியேறுதல்
Q20: தவறான உவமை இணையைத் தேர்ந்தெடுக்க:
(அ) பசுமரத்தாணிபோல – எளிதில் மனத்தில் பதிதல்
(ஆ) மடைதிறந்த வெள்ளம்போல – தடையின்று
(இ) கீரியும் பாம்பும் போல – ஒற்றுமை
(ஈ) விழலுக்கு இறைத்த நீர்போல – பயனற்றசெயல்
Q21: “உள்ளங்கை நெல்லிக்கனி போல” – உவமை கூறும் பொருள் தெளிக:
(அ) தெளிவாக
(ஆ) சிறப்பாக
(இ) நன்றாக
(ஈ) வெளிப்படைத் தன்மையாக
Q22: எலியும் பூனையும் போல' உவமை கூறும் பொருளை எழுதுக
(A) பகைமை
(B) ஒற்றுமை
(C) நட்பு
(D) வேற்றுமை
Q23: உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல். மழைமுகம் காணாப் பயிர் போல
(A) மழை பொழியாத நிலை.
(B) மழையின் முகம் பயிரின் வருத்தம்
(C) நீண்ட நாள் காணாமல் ஏங்குவது
(D) வருத்தமும், மகிழ்ச்சியும் கலந்த நிலை
Q24: உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் - விழலுக்கு இறைத்த நீர் போல
(A) பயனுள்ள செயல்
(B) பயனற்ற செயல்
(C) மிகுதியான செயல்
(D) தகுதியான செயல்
Q25: "நகமும் சதையும் போல” - உவமை கூறும் பொருள் தெளிக
(A) வேற்றுமை
(B) ஒற்றுமை
(C) பகைமை
(D) நட்பு
Q26: தீயொழுக்கம் கானல்நீர் போன்றது பொருத்தமான பொருள் யாது?
(A) மகிழ்ச்சியைத் தருவது
(B) இருப்பது போல் தோன்றும் ஆனால் இராதது
(C) துன்பத்தைக் கொடுப்பது
(D) இன்பம், துன்பம் உடையது
Q27: உவமைத் தொடரின் பொருத்தமான பொருளைத் தேர்ந்து எழுதுக. 'அறிஞர் அண்ணாவின் மேடைப்பேச்சு மடை திறந்த வெள்ளம் போல அமைந்துள்ளது'
(A) தெளிவற்ற பேச்சு
(B) குழப்பமான பேச்சு
(C) தெளிவான, சீரான பேச்சு
(D) கலக்கம் நிறைந்த பேச்சு